வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Thursday, May 20, 2010

14. எங்க ஸ்கூல் பிள்ளைகளுக்குப் பாராட்டுக்கள் !!

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்திருக்கிறதே, நாமளும் நம்ம பள்ளோடத்திலிருந்து 203 பேரைத் தேர்வுக்கு அனுப்பியிருக்கோமேன்னு கொஞ்சம் கவலையோடத்தான் தலைமையாசிரியர் இராஜேந்திரன் அவர்களுக்குத் தொலைபேசினேன்.

இந்த வருடம் 12ம் வகுப்பு கணித வினாத்தாள் எந்த வருடமும் இல்லாத அளவில் கடுமையாக இருந்ததென்று கேள்வி. பொதுவாகக் கணிதத் தேர்வுக்குத் தயார் செய்யும் மாணவர்கள் சென்ற 10 வருடங்களுக்கான தேர்வு வினாத்தாள்களிலிருந்து உள்ள் வினாக்களை மாதிரி வினாக்களாக வைத்து பழகுவார்கள். இந்த வருடம் வினாத்தாள் குறித்த ஆசிரியர் தன் புத்திசாலித்தனத்தைக் காட்டிக் கொள்வதற்காக, சென்ற ஐந்து வருட கணித வினாத்தாள்களை எடுத்து வைத்துக் கொண்டு அதில் வராத மாதிரி கணக்குகளைக் கேட்டிருந்தார் என்பது பரவலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குற்றச்சாட்டு. கணித்தத்தில் முதுநிலைப் படிப்புப் படித்திருக்கும் என்னால் அந்த குற்றச்சாட்டை ஏற்க முடியவில்லையாயினும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் நிலையிலிருந்தும், அவன் வாழ்க்கையையே முடிவு செய்யும் ஒரு தேர்வினைச் சந்திக்க இருந்த ஒரு மாணவனின் மன அழுத்தத்தையும் வைத்துப் பார்த்தால் குற்றச்சாட்டில் கொஞ்சம் அதிகமாகவே நியாயமிருப்பதாகப் பட்டது.

எங்கள் பள்ளியிலிருந்து தேர்வு எழுதிய‌ 203 மாணவர்களில் 12 பேர் தவிர மீதி 191 (94 %) மாணவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். வெற்றி வாய்ப்பை இழந்த 12 மாணவர்களில் 9 பேர் கணீதத்தில் மட்டுமே மதிப்பெண் குறைந்திருக்கிறார்கள். கணித வினாத்தாள் சரியாக இருந்திருக்கும் பட்சத்தில் எங்கள் பள்ளி 98% தேர்ச்சி பெற்றிருக்கக் கூடும்.

சென்ற வருடம் எங்கள் பள்ளி பெற்ற் 100% தேர்ச்சி விகிதம் இந்த வருடமும் பெற வேண்டுமென்று ஆசிரியர்களும் மாணவர்களும் உழைத்திருந்தாலும இந்த வருடத்தின் மாநிலம் தழுவிய தேர்ச்சி விகிதங்களைப் பார்க்கும் பொழுது, 94 சதவிகிதம் மிக நல்ல விகிதமாகத்தான் படுகிறது.

எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் 1132/1200 பெற்ற மாணவர் ஸ்ரீநாத்துக்கும், இரண்டாவது மதிப்பெண் 1127/1200 பெற்ற மாணவர் தினேஷுக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

இதில் மாணவர் தினேஷ் கணிதம், இயற்பியல், வேதியியல் கூட்டில் 196/200 எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. சென்ற வருடம் எங்கள் பள்ளி மாணவி ஆர்த்தி இந்த மூன்று பாடத்திலும் 200/200 எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மொழிப் பாடங்களில் போதுமான அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதற்கு பெற்றோரும் ட்யூஷன் ஆசிரியர்கள் மட்டுமே காரணம். "தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாஸானாலே போதும்" என்று வருட ஆரம்பத்திலிருந்தே பெற்றோர் அறிவுறுத்திவிடுவதால் (அவங்க கவலை அவங்களுக்கு !!) மாணவர்கள் இந்த இரண்டு பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில்லை. அதனால் மட்டுமே இந்த வருடம் மாநில அளவிலான ரேங்க் எதுவும் எடுக்கவில்லை.

தேர்ச்சி பெற்ற் மாணவர்களுக்கு வாழத்துக்கள் !!

மாணவர்களை மிகச் சிறந்த முறையில் பயிற்றுவித்து சிறந்த தேர்ச்சி விகிதம் காட்டிய ஆசிரியர்களுக்குப் பாராட்டுக்கள் !!!

பள்ளி மாணவர்கள் ஸ்ரீநாத், தினேஷ் இருவருக்கும் சிறப்புப் பாராட்டுக்கள் !!






3 comments:

*இயற்கை ராஜி* said...

அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.உழைத்த ஆசிரியர்களுக்கும்,பள்ளிக்கும் வணக்கங்கள்

அபி அப்பா said...

வாழ்த்துகள்! எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்.இன்று போட்டோஸ் அப்டேட் செய்கிறேன்!

இராகவன் நைஜிரியா said...

அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.