வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Wednesday, October 14, 2009

வெளிநாட்டு வாழ் தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு!!!

மயிலடுதுறை, தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப்பள்ளியில் ( நம் பள்ளியில்) சுமார் இருபது லெட்ச ரூபாய் செலவில் அதி நவீனமாய் புதிதாய் கட்டப்பட்ட கணினி துறை அரங்கத்தை இன்று பார்வையிட்ட நம் பள்ளி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் நமது அண்ணன் சீமாச்சு அவர்கள் (S.S. வாசன் U.S.A) அந்த கணினி அரங்கத்தினால் கவரப்பட்டு பரிட்சாத்த முறையில் இரு (பெரிய்) வகுப்பறைகளுக்கு டைல்ஸ் தளம் அமைக்கவும், சுவற்றில் எமல்ஷன் வண்ணம் பூசவும், சில கழிவறைகளை மேல்வசதி செய்யவும் முடிவெடுத்து அதற்கான வேலை நாளையே தொடங்க இருக்கின்றது.

நம் பள்ளியில் படித்த வெளிநாட்டு வாழ் முன்னாள் மாணவர்கள் உடன் சீமாச்சு அண்ணா அவர்களை தொடர்பு கொண்டு தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக விபரங்கள் இன்று மதியம் 1 மணிக்கு நம் பள்ளி தாளாளர் டாக்டர். வெங்கட்ரமணன் அவர்களின் தலைமையில் நடைபெறும் கலந்தாய்வுக்கு பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும்.

புதிய கணினி அரங்க புகைப்படங்கள் நாளை அந்த விபரங்களுடன் வெளியிடப்படும். அண்ணன் அவர்கள் இந்த முறை இன்னும் 9 நாட்கள் மட்டுமே மயிலாடுதுறையில் இருக்க முடியும் என்பதால் உடன் தொடர்பு கொள்ளவும்.

தவிர நம் ஊர் நண்பர்கள் யார் யார் தீபாவளி விடுமுறைக்கு நம் ஊர் வருகின்றனர் என்பதையும் தெரிவித்தால் "Young India Association" மற்றும் தி.ப. தி. அர. தேசிய மேல்நிலைப்பள்ளி சேவை மையம் பற்றியும் விரிவாக ஆலோசிக்க ஏதுவாக இருக்கும்.

என்றும் தங்கள் அன்பு

அபிஅப்பா

2 comments:

ஆயில்யன் said...

உள்ளேன் ஐயா ! :)

உடலால் ஊருக்கு வெளியே இருந்தாலும் ஊரோடு உள்ளத்தால் இணைந்திருக்கிறேன்

புதிய நிகழ்வுகளுக்கு வாழ்த்துக்கள் :)))

Viji said...

Namba DBTR skoola,super news.
Melum ooril nadapavaigalai update seyungalen.