வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Tuesday, January 31, 2012

31. எங்கள் பள்ளியின் பெருமை மிகு வேதியியல் ஆசிரியர் திரு கே.பி


மயிலாடுதுறை அருகே நீடூர் கடுவங்குடியில் உள்ள தீன் கலை அறிவியல் கல்லூரியில் உலக வேதியியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி தலைவர் டாக்டர் டி.எஸ்.ஏ ரபியுதீன் தலைமை தாங்கினார். கல்லூரி கவுரவத்தலைவர் ஜலாலுதீன், நீடூர் அரபிக் கல்லூரி தலைவர் நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வாசுதேவன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் கல்வித்துறையில் சிறந்த வேதியியல் பணியாற்றியதற்காகநாகை ஏ.டி,எம் கல்லூரி வேதியியல் பிரிவு தலைவர் பேராசிரியை மதுராம்பாள்,மயிலாடுதுறை டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர்பத்மநாபன், மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நடராஜன் ஆகியோருக்கு ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.செந்தில்வேல் விருது வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.

விழாவில் பேங்காக் தமிழ் முஸ்லிம் அமைப்பின் தலைவர் சலாலுதீன், மயிலாடுதுறை டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே.ராஜேந்திரன், உதவி தலைமையாசிரியர் காஞ்சிநாதன், நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிவக்குமார், செல்வக்குமார், பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், வினோத்குமார், சுகந்தவல்லி, குணசுந்தரி, கங்காதேவி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை கல்யாணி நன்றி கூறினார்.













No comments: