
எல்லாம் மந்தமாகவே நடக்கிறது என்று அங்கலாய்த்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ... திட்டமிடல் எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருக்கின்றது என்பதை உங்களுக்கு எல்லாம் தெரியப்படுத்தும் விதத்தில் தான் இந்த பதிவு மக்களே! நம் பள்ளி புதிதாக கட்டப்பட இருக்கும் செய்தி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதற்கான மாதிரி கட்டிடத்தின் படம் கூட பள்ளி கூடத்தின் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. அதன் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் வரைபடங்கள் எல்லாம் பள்ளியின் உள்ளே வைக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்களின் ஆலோசனையும் பெறப்பட்டு வருகின்றது. இதனிடையில் நேற்று முன் தினம் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு மிகப்பெரிய கட்டுமானப்பணியில் இருக்கும் நிறுவனத்தில் இருந்து அதன் தலைவரும், ஒரு ஆர்க்கிடெக்டும், பொறியாளரும் நம் பள்ளிக்கு வருகை தந்து நம் பள்ளி தலைமையாசிரியர் திரு. கே. ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் நம் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் திரு. அருண் தாஸ் அவர்களின் தலைமையிலும் பேச்சு வார்த்தை நடந்தது.


1 comment:
ஆயில்யன் திருமணக் கூட்டணியல் பங்கேற்க்காம பாண்டிச்சேரி பேச்சுவார்த்தைக்கு ஏன் போனாருன்னு யோசிச்சேன்.
Post a Comment