வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Friday, March 11, 2011

பாண்டிச்சேரி கூட்டணி பேச்சுவார்த்தை - ஆயில்யன் பங்கேற்பு!!!


எல்லாம் மந்தமாகவே நடக்கிறது என்று அங்கலாய்த்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ... திட்டமிடல் எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருக்கின்றது என்பதை உங்களுக்கு எல்லாம் தெரியப்படுத்தும் விதத்தில் தான் இந்த பதிவு மக்களே! நம் பள்ளி புதிதாக கட்டப்பட இருக்கும் செய்தி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதற்கான மாதிரி கட்டிடத்தின் படம் கூட பள்ளி கூடத்தின் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. அதன் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் வரைபடங்கள் எல்லாம் பள்ளியின் உள்ளே வைக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்களின் ஆலோசனையும் பெறப்பட்டு வருகின்றது. இதனிடையில் நேற்று முன் தினம் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு மிகப்பெரிய கட்டுமானப்பணியில் இருக்கும் நிறுவனத்தில் இருந்து அதன் தலைவரும், ஒரு ஆர்க்கிடெக்டும், பொறியாளரும் நம் பள்ளிக்கு வருகை தந்து நம் பள்ளி தலைமையாசிரியர் திரு. கே. ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் நம் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் திரு. அருண் தாஸ் அவர்களின் தலைமையிலும் பேச்சு வார்த்தை நடந்தது. அது சமயம் நானும், தம்பி ஆயில்யனும், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை கட்டுமான தொழிலதிபர் திரு. மூர்த்தி அண்ணன் அவர்களும் கல்ந்து கொள்ள அண்ணன் திரு. எஸ். எஸ். வாசன் (சீமாச்சு அண்ணன்) வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனைகள் வழங்கினார். வந்திருந்த கட்டுமான நிறுவனத்தினருக்கு திரு. அருண் தாஸ் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள். ஆகவே மக்களே இதோ பள்ளி தேர்வுகள் முடிந்தவுடன் பிரிவு 1 இடிக்கப்பட்டு வேலை ஆரம்பம் ஆகிவிடும். உடனடியாக நம் பள்ளி முன்னாள் மாணவர்கள் தங்கள் பங்களிப்பினை செய்ய சரியான நேரமிது என்பதை உணருங்கள். ஐந்தரை கோடி மதிப்பீடு என்பது இப்போது ஆறு கோடி என.உயர்ந்து விட்டது என்பதையும் உங்கள் மேலான பார்வைக்கு வைக்கின்றோம். (தலைப்பு : சும்மா கவர்ச்சிக்கு)

1 comment:

அரசூரான் said...

ஆயில்யன் திருமணக் கூட்டணியல் பங்கேற்க்காம பாண்டிச்சேரி பேச்சுவார்த்தைக்கு ஏன் போனாருன்னு யோசிச்சேன்.